Font Help?

Martes, Hunyo 06, 2006

12. மதுமிதா அவர்களின் ஆய்வுக்காக,


வலைப்பதிவர் பெயர்: சோழநாடன்
வலைப்பூ பெயர்: தேடலின் பாதையில்
சுட்டி(url) : http://www.chozanaadan.blogspot.com/
ஊர்: சியாட்டல் (நாமெல்லாம் வெக்கிடையாட்டு கூட்டம் போல ஊர் ஊராய் சுற்றும் மென்பொருள் ஆசாமி. இப்போது இருப்பது சியாட்டல்)
நாடு: அமெரிக்கா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: ஆங்கில வலைப்பதிவை பற்றி முன்பே தெரிந்தாலும் தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி 2003 ஜூனில் பத்ரியின் மூலம் அறிமுகம் கிடைத்தது. அன்றிலிருந்து இன்று வரை பெரும்பாலும் தொடந்து கொண்டே வருகின்றேன். ஆரம்பத்தில் கிட்டத்தட்ட அனைத்தையும் படிப்பேன். இப்போது நேரம் கிடைக்கையில் முடிந்தவற்றை பற்றி மட்டுமே படிக்கிறேன்.
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம்: ஜூன் 21, 2005 ல்
இது எத்தனையாவது பதிவு: 12
இப்பதிவின் சுட்டி(url): http://chozanaadan.blogspot.com/2006/06/12.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: முதலில் பின்னூட்டமிடுவதற்காக மட்டுமே ஆரம்பித்தேன். பிறகு அவ்வப்போது கொஞ்சம் எழுதவும் செய்கிறேன். இப்படியும் சொல்லலாம்- இது என் இலக்கற்ற பயணத்தில் கடந்தவைகளும், உள்ளே சூல்கொண்டவைகளும் விட்டுச் சென்ற சுவடுகளின் பதிவுகளுக்கும், சூழலின் மீதான பிம்பங்களின் பிரதிபலிப்பிற்கும்.
சந்தித்த அனுபவங்கள்: நீண்ட காலமாய் என்னுள் இருந்த பல பார்வைகள் மாறியிருக்கின்றன. நல்ல புத்தகங்களின் அறிமுகம் நிறைய கிடைத்திருக்கிறது.
பெற்ற நண்பர்கள்: நண்பர்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் பல நல்ல அறிமுகங்கள் கிடைத்திருக்கின்றன.
கற்றவை: சில சமயம் கோபத்தில் சட்டென தெரித்து விழும் வார்த்தைகளை கட்டுபடுத்த இங்குதான் கற்றுகொண்டேன்.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: அவசியமான அதேசமயத்தில் அபாயகரமான முழு சுதந்திரம். {அதுவும் சில நேரங்களில் சிலரிடம் சுட்டி கொடுக்கும் வரைதான்:-)}
இனி செய்ய நினைப்பவை: படித்துக்கொண்டிருப்பதைவிட இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை. முடியும்போது ஏதாவது எழுதலாம்.
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:சொல்லிக்கொள்ளும் அளவில் பெரிதாக ஒன்றுமில்லை. http://chozanaadan.blogspot.com/2006/01/1.html இந்த சுட்டியில் என்னைப் பற்றிய சிறு அறிமுகம் கிடைக்கும்.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
சுயதம்பட்டம் அடிக்க வாய்ப்பு தந்ததற்கு நன்றி. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

2 Comments:

Blogger Unknown said...

என்ன சோழநாடன், நிறைய உள்குத்து வெச்சு எழுதியிருக்கீங்க. 'எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்' இதுக்கெல்லாம் அர்த்தம் என்ன? ;-)

{அதுவும் சில நேரங்களில் சிலரிடம் சுட்டி கொடுக்கும் வரைதான்:-)}

நீண்ட காலமாய் என்னுள் இருந்த பல பார்வைகள் மாறியிருக்கின்றன.

Mar Hun 06, 08:07:00 PM GMT-4  
Blogger Muthu said...

{அதுவும் சில நேரங்களில் சிலரிடம் சுட்டி கொடுக்கும் வரைதான்:-)}

இதுக்கு அர்த்தம் உங்களுக்கு நல்லாவே தெரியுமே :-) .
(தலை, வீணா வாயை கிளரி மாட்ட வைக்காதீங்க:-). )

Mar Hun 06, 11:27:00 PM GMT-4  

Mag-post ng isang Komento

<< Home