Font Help?

Martes, Mayo 23, 2006

11. முகில்களின் மடியில்



இன்னும் என்னுள்
எதிரொலிக்கும்
உன் குரல், மெல்ல
எனை
நிரப்பியிருக்கிறது.

விசிறியடித்த
வெண்பஞ்சு பொதிகளின்
மேலாக
கைகோர்த்த படி
மிதந்து கொண்டிருக்கிறோம்
நாம்.

சலனமே இல்லா
நதிபோல
ஓடிக்கொண்டிருக்கிறது
என் எண்ணங்கள்
உன்னை மட்டும்
சுமந்த படி.

நேர அட்டவணைகளையெல்லாம்
புறங்கையால் தள்ளி
இரக்கமில்லாமல்
ஆக்கிரமிக்கிறாய்
என்னை.

இதுவே வெறும்
ஆரம்பம்தான்
போக வேண்டியது
எவ்வளவோ
மீதமுள்ளது.

எப்போதும்
எந்நிலையிலும்
என்னோடிருப்பாய்
என்ற எண்ணமே
என்னை வழிநடத்துகிறது.

கண்ணம்மா,
நமது நெடும்
பயணத்திற்கு தயார்படுத்து
உன்னோடு என்னையும்
சேர்த்து.

3 Comments:

Anonymous Hindi-nagpakilala said...

hi chozhanaadan,

kavithai super. ungalukkum unga kannammavirkkum en vaazhthukkal...

Huw May 25, 09:12:00 AM GMT-4  
Anonymous Hindi-nagpakilala said...

hi chozhanaadan,
kavithai superp.... ungalukkum, unga kannammavirkkum en vazhthukkal

Huw May 25, 09:14:00 AM GMT-4  
Blogger Muthu said...

நன்றி Anonymous.
அண்ணே,
யாருண்ணே நீங்க. பாராட்டிதானே எழுதியிருக்கீங்க. பெயரையும் சொல்லலாமே.

Biy May 26, 03:05:00 PM GMT-4  

Mag-post ng isang Komento

<< Home