Font Help?

Biyernes, Hunyo 09, 2006

13. காத்திருக்கவேணும்


சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா!
        சூரிய சந்திரரோ?
வட்டக் கரிய விழி - கண்ணம்மா!
        வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
        பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
        நஷத் திரங்க ளடீ!
சோலை மல ரொளியோ - உனது
        சுந்தரப் புன்னகை தான் ?
நீலக் கடலலையே - உனது
        நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை - உனது
        குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ - கண்ணம்மா!
        மருவக் காதல் கொண்டேன்.
சாத்திரம் பேசு கிறாய் - கண்ணம்மா!
        சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா!
        சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் - வதுவை
        முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோடீ? - இதுபார்.
        கன்னத்து முத்த மொன்று!

2 Comments:

Blogger Unknown said...

புரியுதுங்கோ.....;-)

Lin Hun 18, 08:58:00 PM GMT-4  
Blogger siva gnanamji(#18100882083107547329) said...

முண்டாசுக் கவிராயரை நினைவூட்டியமைக்கு நன்றி

Sab Hul 01, 12:02:00 AM GMT-4  

Mag-post ng isang Komento

<< Home